Tag Archives: விவசாயி
“உழவனின்-உள்ளாடை”
“தேசம்”
சுவை கல்வியை
சுமை என்றாக்கி
சுரண்டும்
கல்வி-ஒரு புறம்.
கடவுள் கொன்று
காமம் உண்டு
காவிஉடையில்
ஆன்மீகம்-ஒரு புறம்.
கள்ளப் பணதில்
வெள்ள உடையில்
கையாட்டும்
அரசியல்-ஒரு புறம்.
ஆடை குறைத்து
ஆபாசம் நிறைத்து
அசிங்கத்துடன்
கலை-ஒரு புறம்.
விதைத்தவன் வீதியிலே
விலைபொருளோ சந்தையிலே
விதியிலா
விவசாயி-ஒரு புறம்.
அடையாளம் அழிந்து
அடைக்கலம் புகுந்து
அடிமைகளாய்
அகதிகள்-ஒரு புறம்.
சூதாட்டம் சுகமென
விளையாட்டாய் விதைதூவ
விளையாட்டாய்
விளையாட்டு-ஒரு புறம்.
வேலை வேண்டி
காசைக் கட்டி
கவலையுடன்
இளைஞன்-ஒரு புறம்.
கடமை உணர்வை
கருக்கி எடுத்து விட்டு
காக்கி சட்டைக்குள்
காவல்-ஒருபுறம்.
காசை நிறைக்க
காப்பகம் நிறைக்கும்
கருணையிலா
பிள்ளைகள்-ஒரு புறம்.
திட்டம் தீட்டி
சத்தம் இன்றி
களவாடும்
களவானி-ஒரு புறம்.
வட்டி உயர்த்தி
பெட்டி நிறைத்து
துண்டைப்போடும்
நிதிநிறுவனம்-ஒரு புறம்.
அடுத்த பெண்ணின்
அணிகலனை அட்டவணையிடும்
அழுக்கு
அழகிகள்-ஒரு புறம்.
முகநூல் சென்று
முகவரி இழந்து
முடங்கிடும்
முயல்கள்-ஒரு புறம்.
ஒரு புறம்
மட்டும் போதும்,
எதையும் தாங்கும்
எங்களின் தேசம்.
எதிர்த்துப் பேசினால்
செவியில் மட்டுமல்ல
செவிட்டிலும் விழும்
எங்கள் தேசம்.
“விவசாயி”
காளமாடு ரண்டு பூட்டி
கலப்பைய அதுல மாட்டி
கழனிய ஏர் உழுதா,
பெரண்டு விழுற மண்ணப்
பாத்தா, கொள்ள அழகடி!
காலம் பார்த்து
வெதச்ச வெத,
மண்ணப் பொளந்து
மொளச்சு வந்தா,
மனசே குளுருதடி!
வேளா வேளைக்கு
தண்ணி பாச்சி,
உரத்தப் போட்டா,
தகப்ப மனசு
தன்னால வந்து சேருதடி!
ஒருநா வயலுக்கு போகலைனா,
மறுநா எனப் பாத்து
“ஏ நேத்து வந்து பாக்கல?”-னு
ஏதோ உரிமையில
கேள்வியா கேக்குதடி!
வளந்து, வயசுக்கு வந்த
பொம்பள மாதிரி
தலைய குனுஞ்சு நிக்கிற
அழக, பாக்கற பாக்கியம்
கெடச்சவ எவனடி!
சுமக்க முடியலைனு,
அறுத்து குமுச்சு
அதுகள வாரி
நெஞ்சோட அணச்சா,
கெடைக்கற சுகம்…