Tag Archives: முகவரி
“கர்ப்பிணி”
மணம் முடிந்த பின்பு
முகமற்றோரின் வசவொலியில்
மூடநம்பிக்கை என்றாலும் கூட
மௌனத்தின் கேள்விகளுக்கு
மாதவிடாய் மாறிய காலங்களில்
மாதம் தள்ளிப் போனதும்
முடி முதல் அடி வரை
முகத்தின் முகவரி மாற
மரணவலி தரும் என்றாலும் கூட
மிகைப்படுத்தி சொல்லவேண்டுமெனில்
“தேசம்”
சுவை கல்வியை
சுமை என்றாக்கி
சுரண்டும்
கல்வி-ஒரு புறம்.
கடவுள் கொன்று
காமம் உண்டு
காவிஉடையில்
ஆன்மீகம்-ஒரு புறம்.
கள்ளப் பணதில்
வெள்ள உடையில்
கையாட்டும்
அரசியல்-ஒரு புறம்.
ஆடை குறைத்து
ஆபாசம் நிறைத்து
அசிங்கத்துடன்
கலை-ஒரு புறம்.
விதைத்தவன் வீதியிலே
விலைபொருளோ சந்தையிலே
விதியிலா
விவசாயி-ஒரு புறம்.
அடையாளம் அழிந்து
அடைக்கலம் புகுந்து
அடிமைகளாய்
அகதிகள்-ஒரு புறம்.
சூதாட்டம் சுகமென
விளையாட்டாய் விதைதூவ
விளையாட்டாய்
விளையாட்டு-ஒரு புறம்.
வேலை வேண்டி
காசைக் கட்டி
கவலையுடன்
இளைஞன்-ஒரு புறம்.
கடமை உணர்வை
கருக்கி எடுத்து விட்டு
காக்கி சட்டைக்குள்
காவல்-ஒருபுறம்.
காசை நிறைக்க
காப்பகம் நிறைக்கும்
கருணையிலா
பிள்ளைகள்-ஒரு புறம்.
திட்டம் தீட்டி
சத்தம் இன்றி
களவாடும்
களவானி-ஒரு புறம்.
வட்டி உயர்த்தி
பெட்டி நிறைத்து
துண்டைப்போடும்
நிதிநிறுவனம்-ஒரு புறம்.
அடுத்த பெண்ணின்
அணிகலனை அட்டவணையிடும்
அழுக்கு
அழகிகள்-ஒரு புறம்.
முகநூல் சென்று
முகவரி இழந்து
முடங்கிடும்
முயல்கள்-ஒரு புறம்.
ஒரு புறம்
மட்டும் போதும்,
எதையும் தாங்கும்
எங்களின் தேசம்.
எதிர்த்துப் பேசினால்
செவியில் மட்டுமல்ல
செவிட்டிலும் விழும்
எங்கள் தேசம்.
“அப்பா”
அம்மா வயிற்றில் கருவூன்ற
அளவற்ற ஆனந்தம் அடைந்திட்டாய்.
ஆண்மகன் என்னை ஈன்றெடுக்க
அன்றே மீசை முருக்கிட்டாய்.
அடிமேல் அடிஎடுத்து நான்வளர
அணு அணுவாய் ரசித்திட்டாய்.
அண்ட அகிலமும் எனைக்காண
அழகாய் ஆடை அணிவித்தாய்.
எட்டி உதைத்ததை எண்ணி
மார்தட்டி இறுமாப்பு கொண்டிட்டாய்.
ஆயிரம் சுமைகள் நீசுமந்து
அருமை மகனை வளர்த்திட்டாய்.
என் தேவை நிறைவேற்ற
உன் தேவை குறைத்திட்டாய்.
தடுமாறி தயங்கிய காலத்தில்
தோழனாய் தோள் கொடுத்திட்டாய்.
தடம்மாறி தவித்த தருணத்தில்
தட்டி தன்னம்பிக்கை தந்திட்டாய்.
தோல்வியில் துவண்டு அழுகையில்
தோள் சுமந்து நின்றிட்டாய்.
வேலையின்றி வெட்டியாய் சுற்றினாலும்
வேட்கையுடன் வெண்சாமரம் வீசிட்டாய்.
வானகம் விஞ்சி வாழ்ந்தாலும்
உத்தமனாய் உயிர்வாழக் கற்பித்தாய்.
என்பெயர் முன்னும் பின்னும்
முத்திரையில் முகவரியை பதித்திட்டாய்.
போலியில்லா உன்முகம் கண்டாலே
பொலிவுடன் பொதியினை சுமப்பேனே!