கருவறை வேறுபட்டாலும்
கல்லூரியில் ஒன்றானோம்.
பாலின பாகுபாடின்றி
பார்போற்ற பழகினோம்.
தனிவுடமை நீக்கி
பொதுவுடமை போதித்தோம்.
நட்பிலே உறவாடி
நாட்களை நலமாக்கினோம்.
கண்ணீர் துளிகளுடன்
காலத்தால் கலைகிறோம்.
கடமையை நிறைவேற்ற
நற்பாதையில் பயணிப்போம்.
உயிரால் இணைத்தபின்
உடலால் தானே பிரிகிறோம்.
அழியாத நினைவுகளுடன்
ஆன்மாவில் தொடருவோம்…